ஒரு காமுகன் இளம் பெண்ணின் கையைத் தொட்டுப் பேசினான் – அவன் கையை வெட்டு!
இன்னொரு காமாந்தகாரன் சொல்லால் சீண்டி பலாத்காரம் செய்தான் – தூக்கில் போடு அவனை!
பல மாதங்கள் கண்டவனுடன் சுற்றி உல்லாசம் அனுபவித்த பெண்ணை பல லாட்ஜ்களில் அந்தப் பெண் அவனைத் தேடிச் சென்றபோதெல்லாம் மீண்டும் மீண்டும் அவன் கற்பழித்தான் – கைது செய்து சிறையிலடை அவனை!
காஞ்சீபுரம் தேவனாதனைத் தேடிச் சென்ற பெண்களையெல்லாம் சீரழித்தான் சண்டாளன். அவன் அப்பெண்களின் நாக்கிலும் மூக்கிலும் ஏதோ தடவி திரும்பத் திரும்ப கற்பழித்தான் ஒரு பாவமும் அறியாத அந்த அப்பாவி அபலைப் பெண்களை. அவர்களுக்கு இப்போதுதான், அதாவது சிடிக்கள் வெளிவந்த பிறகுதான், நினைவுக்கு வந்தது அந்தத் தடவல்களெல்லாம் – அவன் கண்ணில் படும்போதெல்லாம் கையில் கிடைத்ததைக் கொண்டு அடி!
இப்படித்தான் மக்களின் உணர்ச்சிகள் கிளர்ந்தெழுகின்றன. அவை சொற்களாலும் செயல்களாலும் வெளிப்படுகின்றன.
சரி. தங்கள் வாழ்வுக்கு வழிதேடி செக்யூரிடி வேலையில் சேரும் ஏழை இளம் ஆண்களை தங்கள் வெறிக்குத் தீனியாகப் பயன்படுத்தி கசக்கி உமிழும் இந்த மேட்டுக் குடிப் பெண்குலத் திலகங்களை என்ன செய்வது? எந்தவித தண்டனைகளை இவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
நீங்களே சொல்லுங்கள். நீங்கள் எல்லோரும் நடுநிலையாளர்கள் அல்லவா!
செய்தி: நன்றி – குமுதம் ரிப்போர்ட்டர் 11-02-2010 இதழ்.



ஒருவர் பின் ஒருவராக, பல டாக்டர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, பின் அவர்களை கழற்றிவிடும் பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=187
Long live AIDWA
திருமணம் செய்து பொய்கேசுகளில் சிக்கி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஓநாய்களுக்கு கொட்டி அழுவதை விட இது இளைஞர்களுக்கு நல்ல வழியாகத்தான் இருக்கும்!
ஆகா…
498ஏ உயிர் கொல்லி போல் பெருகி வளர்ந்து களியாட்டம் போடுவதுபோல் இன்னும் இந்த தொழில் மூலம் எய்ட்ஸ் என்னும் உயிர்கொல்லி மேலும் பெருகிட வாய்புண்டு.
இந்த நல்ல இணைய தளம் இது போன்ற செய்திகளை கொடுத்து தரத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது. இந்த செய்திக்கும் 498A வுக்கும் எந்த சம்பம்தமும் இல்லை.