நம் சமுதாயத்தில் ஆண் என்றாலே ஒரு அயோக்கியன், காமுகன், கண்ட பெண்களையெல்லாம் கற்பழிப்பவன், மனைவியைக் கொடுமைப் படுத்துபவன், வரதட்சணைக்காக கட்டிய மனைவியைக் கொடுமை செய்து உயிரோடு எரித்து படுகொலை செய்பவன், ஆனால் அனைத்துப் பெண்களும் ஒழுக்க சீலர்கள், அபலைகள், ஒரு பாவமும் அறியாதவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரே நேர்கோட்டில் அமைந்த மனப்பாங்கு வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சட்டங்கள் இற்றைப்படுத்தப்பட்டு, அவற்றின் செயல்பாடுகளால் இன்றையதினம் ஆணாகப் பிறப்பதே கொடுமை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பிறவியிலேயே ஆண் என்பவன் ஒரு கிரிமினல் என்னும் கருத்தியல் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஊடகங்களால் சித்தரிக்கப்படுகின்றன.
ஒரு பெண் ஒரு ஆணுடன் பல நாட்கள் ஊர் ஊராக, லாட்ஜ் லாட்ஜாக சுற்றி “உல்லாசம்” அனுபவித்துவிட்டு, அதனால் ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொண்டாலோ, அல்லது அவனிடமிருந்து பணம் கறக்கவோ “அவன் என்னை கற்பழித்துவிட்டான்” என்று புகார் கொடுத்தால், ஒருவித விசாரணையோ முகாந்திரமோ இல்லாமல் அந்த ஆணை கைது செய்து சிறையிலடைத்துவிடுகிறார்கள். Consensual sex is converted into a charge of rape at the sole whim of the woman partner of cohabitation.அதோடு மடுட்மல்லாமல் அத்தகைய வழக்குகள் விசாரணைக்கு வரும்போது நீதிமன்றங்கள் அந்தப் பெண்ணின் கூற்றே போதும், வேறு எந்தவித சாட்சியங்களே தேவையில்லை என்று அறுதியிட்டுக் கூறி அந்த ஆண்மகனுக்கு தண்டனை அளித்துவிடுகிறார்கள்.
பொய் வரதட்சணை புகார்கள், பொய் குடும்ப வன்முறைப் புகார்கள், பொய் கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்காரப் புகார்கள் போன்றவற்றால் இன்றைய நிலையில் நம் சமூகத்தில் ஒரு பெண்ணிடம் ஊடாடுதல், பழகுதல் என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் ஒரு பாம்புப் புற்றில் கைவிடுவதற்குச் சமம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஆண் மகனைப் பெற்ற பெற்றோர்கள அனைவரும் தங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.
இந்த நிலை நீடித்தால், நம் நாட்டில் ஒரு ஆணுக்கு திருமணம் செய்விப்பதற்கு முன் அந்த ஆணும் அவனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் அனைவரும் கட்டாயம் முன் ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் நிலையும், அதன் நீட்சியாக ஆண்சிசுக் கொலைகளும் பரவலாக நிகழும் நாள் சீக்கிறமே தோன்றும் என்பது திண்ணம்!
சரி, இத்தகைய ஆண்களை வதைப் படுத்தும் போக்கால் அந்தப் பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன?
இதோ இந்தக் கதையைப் படியுங்கள். நேரடித் தொடர்பு இல்லையென்றாலும் அத்தகைய மனப்பான்மையின்பால் விளைந்த பாதிப்புகளை நீங்கள் அவதானிக்கலாம்.
“மன அழுத்தம் காரணமாக பொய் சொல்கிறார். நடிகை கனகாவுக்கு திருமணமே நடக்கவில்லை”
தந்தை தேவதாஸ் பேட்டிசென்னை, பிப்.9 – 09-02-2010. தினத்தந்தி
நடிகை கனகாவுக்கு திருமணமே ஆகவில்லை. மன அழுத்தம் காரணமாக, அவர் பொய் சொல்கிறார் என்று அவருடைய தந்தை தேவதாஸ் கூறினார்.
திடீர் பேட்டி
நடிகை கனகா, லாஸ் ஏஞ்சல்சில் மெக்கானிகல் என்ஜினீயராக இருந்த முத்துக்குமார் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணம் ஆன 15-வது நாள் அவர் காணாமல் போய்விட்டதாகவும் திடீர் பேட்டி அளித்தார்.
தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதாகவும், தன் கணவர் காணாமல் போனதில் ஆவி அமுதாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
தந்தை பேட்டி
இதுபற்றி கனகாவின் தந்தை தேவதாசை நிருபர்கள் சந்தித்து கேட்டபோது, அவர் மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது:-
“கனகாவுக்கு பதிமூன்று வயதாகும்போது, நான் அவளுடைய தாயார் தேவிகாவை விட்டு பிரிந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவர்களை நான் பார்க்கவே இல்லை. 18 வருடங்கள் கழித்து கனகாவை சந்தித்து பேசினேன்.
“உனக்கு திருமண வயதாகி விட்டது. திருமணம் செய்துகொள்” என்று கூறினேன். ஒரு பெண் தாய்மை அடைந்தால்தான் அவள் வாழ்க்கை முழுமை அடையும். நீ தாயானால்தான் நான் தாத்தா ஆக முடியும் என்றெல்லாம் பேசியபின், திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதித்தாள். நீங்களே மாப்பிள்ளை பாருங்கள் என்றாள்.
மன அழுத்தம்
இது, நடந்தது 2008-ம் ஆண்டு. ஆனால், 2007-ம் ஆண்டு தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக இப்போது கூறுகிறாள். திருமண ஆல்பம் எங்கே? என்று கேட்டால், இதுதான் என்று ஒரு கிழிந்த பேப்பரை காட்டுகிறாள். அதில், உருவமே தெரியவில்லை.
கனகா, மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறாள். ஒரு தந்தை என்ற முறையில் அவள் மீது அனுதாபப்பட்டு, “நீ என்னுடன் வந்துவிடு. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். உடனே, “எங்க அம்மா மரணத்துக்கு நீதான் காரணம்” என்று வெறிபிடித்தவள் போல் பேசுகிறாள். என்னை அவள் பேசவே விடவில்லை. அவள் பேசியதை எல்லாம் `டேப்’ செய்து வைத்திருக்கிறேன்.
ஆதாரம் இல்லை
2007-ம் ஆண்டு திருமணம் நடந்திருப்பதாக கனகா கூறுகிறாள். அதில் ஒருவேளை உண்மை இருக்குமோ என்று ஒவ்வொரு திருமண பதிவு அலுவலகமாக சென்று ஆதாரங்களை தேடினேன்.
எந்த பதிவு அலுவலகத்திலும் கனகா திருமணம் செய்துகொண்டதற்கான ஆதாரம் இல்லை. கற்பனையாக ஒரு கணவரை உருவாக்கிக்கொண்டு, மன அழுத்தம் காரணமாக கனகா பொய் சொல்கிறாள். என் மகளுக்கு என்ன ஆகுமோ என்று நினைக்கும்போது பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது.
தேவிகாவுடன்தான் எனக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை. என் மகளையாவது அழைத்து வந்து வாழ வைக்கலாம் என்று நினைத்தால், கனகா என் வீட்டுக்கு வர மறுக்கிறாள்.”
இவ்வாறு தேவதாஸ் கூறினார்.
“மன அழுத்தம் காரணமாக பொய் சொல்கிறார். நடிகை கனகாவுக்கு திருமணமே நடக்கவில்லை”
Most of the educated women’s fail to realize that they are harassed by their own family members ie . her own parents ,brothers and sisters. In cine world this is very common. Example actress Kanchana & in future Meena, Sneha might occupy the same status.
Even in IT industry, women’s are made to work and generally she would get married after 30 & it would be a short lived one .I couldn’t understand why the parents are not ready to get their child married before she reaches 30. What’s wrong in sacrificing their luxury because of that extra income ?
Today’s women have been made to misinterprete the word called Liberty ,freedom ,etc .Wrong ideas is been sowed by groups which tries to rob the public fund used for the welfare of humanbeings .Upto 55, they would have the strength to dance to their own wishes but they fail to look into their life after 60’s .
Even in false 498a , the wife is not the one who reaps the benefit.It is indeed her old parents or her brothers /sisters who enjoys the short lived fruit of that separation .They fail to realize that they would get paid back in their own coin
When a person refuses to accept that they have made a bad choice or decision and if they prolong it, the mistake becomes extremely expensive and hurtful to his / her future.
மிகச் சரியாக சொன்னீர்கள் ஏ டீ அவர்களே… வீட்டுல சிறு பிரச்சனையா உடனே போடு 498ஏ பொய்கேசு… எல்லாரையும் பிடிச்சடி உள்ளே போட்டிடலாம் அப்படின்ன எவனாச்சும் சொன்னா வரிஞ்சி கட்டி கேசு போட்டு ஜெயில்ல புடிச்சி போட்டுறது… அப்புறம் கட்டப்பஞ்சாயத்து(இது ஒரு லாபகரமான தொழில் எந்த ஒரு முதலிடும் வேண்டாம்) காம்பரமைஸ்ன்னு கெஞ்சி கூத்தாட வேண்டியது.
498ஏ பொய்கபோட்ட கற்புக்கரசி பொண்டாட்டி இப்போஎன் கூட சேர்ந்தது வாழ்றன்னு கேஞ்சி கூத்தாடுது… இதெ பொம்பளதன் போலீஸ் ஸ்டெசன்ல இவன புடிச்சி உள்ள பொடுங்கன்னு வசனம் பேசுனது..