யார் அந்த லெனின்?
அவர்தானய்யா தினமலர் செய்தி ஆசிரியர். சில மாஜி நடிகைகள் புகார் கொடுத்ததால் “பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமை” சட்டத்தில் கைதானவர்!
ஒரு செய்தியை நாளிதழில் பிரசுரித்ததற்காக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தில் கைது ஆனார் அந்த லெனின். ஆனால் என்.டி.டிவாரி என்ன ஆனார்?
காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கோயில் கருவறையில் காமக் கேளிக்கை நடத்தினான் என்று கைது செய்யப்பட்டு, செக்ஸ் கொடுமை, வன்கொடுமை என்று ஏராளமான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளப்பட்டிருக்கிறான். அவன் செய்த தவறுக்கு அவனுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கட்டும். ஆனால் அவனைத் தேடி வந்து சுகம் அனுபவித்த பெண்குலத் தேவதைகளெல்லாம் இப்பொது பத்தினி ஆகி விட்டனரே, அது எப்படி!
பாவம் அந்த அபலைப் பெண்கள். கபடு சூதில்லாமல் நாக்கை நீட்டியிருக்கிறார்கள்; அதில் போய் ஏதோ மன்மத குளிகையைத் தடவி விடலாமா, அந்த காமாந்தகாரன்? இன்னும் சிலருக்கு மருந்து கலக்கி குளிர் பானம் வேறு கொடுத்தானாம். ஒண்ணுமே தெரியாத அந்தப் பேதைகளை எப்படி ஏமாற்றியிருக்கிறான், பாருங்கள்!
சரி. அவன்தான் கொடுத்தான். இவர்கள் ஏன் குடித்தார்கள்? அவனைத்தேடி மீண்டும் மீண்டும் அந்தப் பெண்கள் சென்றார்களாம். அவன் மீண்டும் மீண்டும் இவர்களைக் ”கற்பழித்தானாம்”!! “கற்பு” என்பதற்கு ஒரு புதிய பாஷ்யமே எழுதுகிறார்கள் இந்த அபலைகள். அதுவும் அவர்கள் எப்போது புகார் கொடுக்கிறார்கள்? அந்த தேவனாதன் சிக்கிய பிறகு – முன்னதாக இல்லை!
சரி, அவர்கள் எப்படியோ போகட்டும். நாம் இப்போது என்.டி.டிவாரிக்கு வருவோம்.
தேவநாதன் கோவில் கருவறையில் உல்லாசம் செய்தான், அது சிடி-யாக வந்தது. அதை ஒரு டிவி சேனலில் ஒளி பரப்பினார்கள். அவன் கைது செய்யப்பட்டான்.
என்.டி.டிவாரி கவர்னர் மாளிகை என்னும் மக்களாட்சியின் புனித இடத்தில் இளம் பெண்களுடன் அரவணைப்பில் இருந்ததாக ஒரு டிவி சேனலில் படம் காண்பித்தார்கள். அவருக்கு மட்டும் தேவனாதனுக்கு நடந்த சடங்குகள் ஏன் நடைபெறவில்லை? இந்த நாட்டில் கவர்னருக்கு ஒரு சட்டம், சாதாரண மனிதனுக்கு வேறொரு சட்டமா? குற்றம் ஒன்று தானே?
திவாரி மேட்டரின் மேல் விவரங்களுக்கு செல்க: இங்கே. ஓடும் படம் இங்கே!
சென்ற வெள்ளிக்கிழமை (25-12-2009) கிறிஸ்துமஸ் லீவு. தொடர்ந்து வார விடுமுறை. அதனால் வியாழனன்று மாலை ஒரு சாதாரணக் குடிமகன் கைது செய்யப்பட்டால் அவனது அடிப்படை உரிமையான பெயில் எடுப்பதற்கு திங்கள் காலை வரையில் காத்திருக்க வேண்டும். இடையில் உள்ள 3 நாட்களுக்கு மேல் போலீஸ் ஸ்டேஷன் லாக்-அப்பில் தான் கிடக்க வேண்டும். அது பெட்டி கேசாக இருந்தாலும் சரி. பொய் 498A கேசுகளில் கைது ஆகும் அப்பாவி மாமனார், மாமியாராக இருந்தாலும் சரி. அவர்களுக்கு இந்த கதிதான்.
ஆனால் திவாரிக்கு மட்டும் அவசர அவசரமாக ஜட்ஜ் வீட்டில் கூடி, ஒரு மணி நேரத்திற்குள் அந்தப் படங்களை டி.வி சேனலில் காட்டக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். இந்த சுறுசுறுப்பை எல்லா கேசுகளிலும் காண்பித்தால் நம் நாட்டு கோர்ட்டுகளில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கி நிற்காதே! ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டிய விவாகரத்து வழக்குகள் 15 ஆண்டுகள் வரை ஜவ்வாக இழுக்கப்படுகின்றனவே. திவாரிக்காக மட்டும் மின்னல் வேக நடவடிக்கை ஏன்? அதுவும் பொது நல வழக்காம்! எது பொது நலம்?
நம் நாட்டில் பெண்களுக்காகவே அனுதினமும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் (AIDWA) இந்த விவகாரத்தை கையிலெடுத்துப் பெரிதாக்கி திவாரிக்கு எதிராக சட்டபூர்வ நவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட போராடுவார்களா? இல்லை, அவர்கள் செயல்பாடு எல்லாமே நடுத்தர வர்க்க ஆண்கள் மற்றும் ஆண்களைப் பெற்ற தாய்மார்களை பொய் வரதட்சணை கேசில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பவது மட்டும் தானா?
இதே என்.டி.டிவாரி முன்பு இன்னொரு சிக்கலில் மாட்டினார். ரோகித் சேகர் என்னும் 29 வயது இளைஞர் தனது உண்மையான தந்தை என்.டி.டிவாரிதான் என்று டில்லி உயர்நிதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் காலம் கடந்து வழக்குத் தொடர்ந்திருப்பதைக் காரணம் காட்டி சென்ற மாதம் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த ரோகித்தின் தாய் உஜ்வால சர்மா, தான் கணவனிடமிருந்து பிரிந்து தனியாக வாழும்போது திவாரியுடன் ஏற்பட்ட உறவினால் பிறந்தவர் ரோகித் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
தற்போது ஹரியாணாவில் 19 ஆண்டுகளுக்கு முன் ருசிகா என்னும் பெண்ணை மானபங்கப்படுத்தி தற்கொலைக்குத் தள்ளிய போலீஸ் டி.ஜி.பி எஸ்.பி.எஸ்.ராதோட் என்பவர் மீது இன்னும் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராடிவரும் AIDWA தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவருமான திருமதி. பிருந்தா காரத் அவர்கள் இந்த ரோகித் சேகரின் தாய் உஜ்வால சர்மாவின் வழக்கையும் கையிலெடுத்து அவர்களுக்கும் நியாயம் கிடைக்கப் போராடுவாரா? திவாரியால் வஞ்சிக்கப்பட்டதாக குமுறும் அந்தப் பெண்ணுக்கும் நீதி கிடைக்க வேண்டாமா?

///தேடி வந்து சுகம் அனுபவித்த பெண்குலத் தேவதைகளெல்லாம் இப்பொது பத்தினி ஆகி விட்டனரே, அது எப்படி!///பதில் தெரியாத கேள்வி. அந்த பத்தினிகள் கைது செய்ய்யப்பட வேண்டும்
காலகாலமாக ஒவ்வொரு ரெய்டிலும் விபச்சார அழகிகள் மட்டுமே கைதாகையில் தப்பிச் சென்ற அழகன்கள் எப்படி மறக்கப் பட்டனரோ அப்படித்தான் இதுவும்.
நீங்களே சொன்னது போல் தேவநாதனும், என்.டி.திவாரியும் தாங்கள் பணிபுரியும் இடத்தையும், தங்கள் பணியின் கௌரவத்தையும் மாசு படுத்தியதற்காகத்தான் கேவலப்படுத்தப் படுகின்றனரே ஒழிய அவர்களே இதை மறைவாக செய்திருந்தால் அங்கும் அழகிகள் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பார்கள், இந்த அழகன்கள் வெளி வந்து ஒழுக்கம் பேசிக் கொண்டே இருந்திருக்கலாம். என்ன செய்வது? விதி வலியது ஒரு சில சந்தர்ப்பங்களிலாவது அழகன்களையும் குற்றத்தின் பொறுப்பாளர்களாக காட்ட வேண்டி வந்து விடுகிறது பாருங்கள். சோகம்தான்…
// சில சந்தர்ப்பங்களிலாவது அழகன்களையும் குற்றத்தின் பொறுப்பாளர்களாக காட்ட வேண்டி வந்து விடுகிறது பாருங்கள். சோகம்தான்… //
அம்மா சந்திரா அவர்களே ,
பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க நீதிமன்றம் ஆலோசனை
இந்தியாவில் பாலியல் தொழிலை பலனளிக்கும் வகையில் தடைசெய்ய அரசாங்கத்தால் இயலவில்லை என்கிற ஓர் நிலையில், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது பற்றி இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்நாட்டின் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கினால் அது பாலியல் தொழிலாளிகளுக்கு புனர்வாழ்வு கிடைக்க உதவும் என்றும், பெண்கள் பாலியல் தொழிலுக்காக சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தவிர்க்க உதவும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியாவில் சிறுமி ஒருத்தி பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசு சாரா உதவி அமைப்பு ஒன்று தொடுத்திருந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விபச்சாரம் சட்டப்படி குற்றமென்றாலும், இந்தியாவெங்கும் பாலியல் தொழில் செழிப்பாக நடந்து வரவே செய்கிறது.
இந்த அணுகுமுறை சரியா என்று, பி.யு.சி.எல் எனப்படும் மனித உரிமை அமைப்பின் தேசிய துணைத் தலைவர் சுதா ராமலிங்கம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கு கேட்கலாம்
http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2009/12/091212_pros?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/12/printable/091212_prosti.shtml
சந்திரா,
இரு பாலருமே நடந்த தவற்றுக்கு பொறுப்பானவர்கள் என்று ஒப்புக் கொண்டமைக்கு நன்றி.
ஆனால் தேவநாதன் தான் பணி புரியும் இடத்தைக் கேவலப்படுத்தியது மட்டுமின்றி “கற்பழிப்பு” என்ற குற்றத்தையும் அவர்மேல் சாட்டப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. நடந்த நிகழ்ச்சியின் முழு விவரங்களையும் படங்களையும் பார்த்தவர்கள் பலர், இங்கே “கற்பு”க்கு என்ன வேலை, அது எங்கிருந்து வந்தது என்று கேட்கிறார்கள். அதுதான் வேடிக்கை!
செக்ஸ் அர்ச்சகர் கற்பழித்ததாக மேலும் 2 பெண்கள் வாக்குமூலம்
===============
இந்த “கற்பழிப்பு” ஸ்கோர் தினந்தோரும் ஏறிக் கொண்டேயிருக்கிறது. சீக்கிறமே “சென்சரி” அடித்து விடுவார்கள் போலிருக்கிறது!
==========================
ஸ்ரீபெரும்புதூர்: அர்ச்சகர் தேவநாதன் கற்பழித்து விட்டதாக மேலும் இரண்டு பெண்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களில் ஒருவர் திருமணமாகாத இளம்பெண்.
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் பெண்களை மயக்கி கருவறைக்குள் வைத்தே அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நர்ஸ், ஆசிரியை, விஐபி வீட்டுப் பெண்கள் என சகல தரப்புப் பெண்களையும் இவர் தனது காம இச்சைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மனைவி, தனக்கு பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து கருவறைக்குள் வைத்து தேவநாதன் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்திருந்தார்.
அதை பின்னர் செல்போன் கேமராவில் படமாக்கி அதைக் காட்டி பலமுறை தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஒரு பூக்காரப் பெண்ணும், தேவநாதன் தன்னை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.
கோவிலுக்கு பூ கொடுக்க வரும் போது எல்லாம் செல்போனில் எடுத்த படத்தை காட்டி மிரட்டி பலமுறை என்னை கருவறையில் வைத்து செக்ஸ் லீலையில் ஈடுபட்டார் என்று அவர் வாக்குமூலம் அளித்தார்.
இப்புகார்களின் அடிப்படையில் தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேவநாதனுக்கு ஆண்மை பரிசோதனையும் சமீபத்தில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் போலீசாரிடம் தேவநாதன் தன்னை கற்பழித்து விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
போலீசார் அந்த 2 பெண்களிடமும் ரகசியமாக விசாரணை செய்து வருவதாக தெரிகிறது. இரண்டு பெண்களில் ஒருவர் திருமணம் ஆகாத இளம்பெண்.
(தட்ஸ்தமிழ்)
”சென்னை: தியாகராயநகர் வீட்டில் 30 முறையும், கோட்டூர்புரம் வீட்டில் 20 முறையும் என மொத்தம் 50 முறை சாமியார் எனது வாழ்வை சீரழித்தார் என்று திகில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஹேமலதா.” (செய்தி தட்ஸ்தமிழ்)
“கற்பழிப்பு” மீட்டர் ஏதாவது பொருத்தியிருப்பாய்ங்களோ!
எப்படித்தான் இப்படி துல்லியமா கணக்கு சொல்றாங்களோ!
முன்பு கஞ்சா கேசுகள் இருந்த ஸ்தானத்திற்கு இப்போது கற்பழிப்பு வந்திருக்கிறது. சீக்கிறமே இதற்கும் ஒரு முடிவு வந்துவிடும்!
சந்திரா போன்ற பெண்கள் பொதுவாக எப்போது உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார்கள். கோடிக்கணக்கான மானம் கெட்ட பெண்களில் இவரும் ஒருவர்தானே வெட்கக்கேடு.
இதெல்லாம் போன ஜென்மத்து சாபம். தாய்க்குலம்னா தனி மரியாதை தான்,,,,