By: Tamil 498A on: 2010-02-15 | பார்வை: 309|
இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்த அபலை அமலா!
பிப்ரவரி 15,2010. தினமலர்
நாமக்கல் : தன் குழந்தைகள் மீது கணவர் பாசத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு பிறந்த ஒரு குழந்தை, தத்தெடுத்த குழந்தை என இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல் எஸ்.பி.எம்., பங்களாவில் வசித்து வருபவர் நேரு (43); தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், சரஸ்வதி என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், திருச்சியில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்து சக்திவேல் (8) என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்நிலையில், சரஸ்வதிக்கு ஷாலினி என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில ஆண்டில் சரஸ்வதி இறந்தார். அதை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாவட்டம் எம்.களத்தூரை சேர்ந்த அமலா (23) என்ற பெண்ணை, நேரு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ராகவி (3), கவின் (2) என இரண்டு குழந்தைகள் பிறந்தன.
தொடர்ச்சி » »
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் biased laws, child custody, crisp, father, husbands, law, parents, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சமூகம், சிசுக்கலை, தாய்மை, பெண்கள் செய்யும் வன்முறை, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-02-12 | பார்வை: 852|
ஒரு காமுகன் இளம் பெண்ணின் கையைத் தொட்டுப் பேசினான் – அவன் கையை வெட்டு!
இன்னொரு காமாந்தகாரன் சொல்லால் சீண்டி பலாத்காரம் செய்தான் – தூக்கில் போடு அவனை!
பல மாதங்கள் கண்டவனுடன் சுற்றி உல்லாசம் அனுபவித்த பெண்ணை பல லாட்ஜ்களில் அந்தப் பெண் அவனைத் தேடிச் சென்றபோதெல்லாம் மீண்டும் மீண்டும் அவன் கற்பழித்தான் – கைது செய்து சிறையிலடை அவனை!
காஞ்சீபுரம் தேவனாதனைத் தேடிச் சென்ற பெண்களையெல்லாம் சீரழித்தான் சண்டாளன். அவன் அப்பெண்களின் நாக்கிலும் மூக்கிலும் ஏதோ தடவி திரும்பத் திரும்ப கற்பழித்தான் ஒரு பாவமும் அறியாத அந்த அப்பாவி அபலைப் பெண்களை. அவர்களுக்கு இப்போதுதான், அதாவது சிடிக்கள் வெளிவந்த பிறகுதான், நினைவுக்கு வந்தது அந்தத் தடவல்களெல்லாம் – அவன் கண்ணில் படும்போதெல்லாம் கையில் கிடைத்ததைக் கொண்டு அடி!
இப்படித்தான் மக்களின் உணர்ச்சிகள் கிளர்ந்தெழுகின்றன. அவை சொற்களாலும் செயல்களாலும் வெளிப்படுகின்றன.
சரி. தங்கள் வாழ்வுக்கு வழிதேடி செக்யூரிடி வேலையில் சேரும் ஏழை இளம் ஆண்களை தங்கள் வெறிக்குத் தீனியாகப் பயன்படுத்தி கசக்கி உமிழும் இந்த மேட்டுக் குடிப் பெண்குலத் திலகங்களை என்ன செய்வது? எந்தவித தண்டனைகளை இவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
நீங்களே சொல்லுங்கள். நீங்கள் எல்லோரும் நடுநிலையாளர்கள் அல்லவா!
செய்தி: நன்றி – குமுதம் ரிப்போர்ட்டர் 11-02-2010 இதழ்.

தொடர்ச்சி » »
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, harassment, law, lust, misuse, seduction, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், வெறி
By: Tamil 498A on: 2010-02-11 | பார்வை: 195|
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: கோர்ட்டு வளாகத்தில் கடத்தப்பட்ட புதுப்பெண்ணை போலீஸ் மீட்டது
மனைவி தன் பெற்றோருடன் வாழப்போவதாக கூறியதால் கணவர் கண்ணீர் விட்டு கதறல்
புதுச்சேரி, பிப்.11 – 2010. செய்தி – தினத்தந்தி
புதுச்சேரி அருகேயுள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தனஞ்செயம், டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருடைய தூரத்து உறவினர் சிவகாமி. இவர் புதுச்சேரி கவுண்டன்பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் தவசெல்வி (வயது 20).
உறவினர் என்பதால் தனஞ்செயம், தவசெல்வி இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதனால் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி காதல் பறவைகள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பதிக்கு சென்றனர். அங்கு தனஞ்செயம்-தவசெல்வி திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ச்சி » »
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, divorce, dv act, husbands, law, love, manorama, misuse, parents, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, காதல், குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு
By: Tamil 498A on: 2010-02-09 | பார்வை: 170|
நம் சமுதாயத்தில் ஆண் என்றாலே ஒரு அயோக்கியன், காமுகன், கண்ட பெண்களையெல்லாம் கற்பழிப்பவன், மனைவியைக் கொடுமைப் படுத்துபவன், வரதட்சணைக்காக கட்டிய மனைவியைக் கொடுமை செய்து உயிரோடு எரித்து படுகொலை செய்பவன், ஆனால் அனைத்துப் பெண்களும் ஒழுக்க சீலர்கள், அபலைகள், ஒரு பாவமும் அறியாதவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரே நேர்கோட்டில் அமைந்த மனப்பாங்கு வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சட்டங்கள் இற்றைப்படுத்தப்பட்டு, அவற்றின் செயல்பாடுகளால் இன்றையதினம் ஆணாகப் பிறப்பதே கொடுமை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பிறவியிலேயே ஆண் என்பவன் ஒரு கிரிமினல் என்னும் கருத்தியல் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஊடகங்களால் சித்தரிக்கப்படுகின்றன.
ஒரு பெண் ஒரு ஆணுடன் பல நாட்கள் ஊர் ஊராக, லாட்ஜ் லாட்ஜாக சுற்றி “உல்லாசம்” அனுபவித்துவிட்டு, அதனால் ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொண்டாலோ, அல்லது அவனிடமிருந்து பணம் கறக்கவோ “அவன் என்னை கற்பழித்துவிட்டான்” என்று புகார் கொடுத்தால், ஒருவித விசாரணையோ முகாந்திரமோ இல்லாமல் அந்த ஆணை கைது செய்து சிறையிலடைத்துவிடுகிறார்கள். Consensual sex is converted into a charge of rape at the sole whim of the woman partner of cohabitation.அதோடு மடுட்மல்லாமல் அத்தகைய வழக்குகள் விசாரணைக்கு வரும்போது நீதிமன்றங்கள் அந்தப் பெண்ணின் கூற்றே போதும், வேறு எந்தவித சாட்சியங்களே தேவையில்லை என்று அறுதியிட்டுக் கூறி அந்த ஆண்மகனுக்கு தண்டனை அளித்துவிடுகிறார்கள்.
பொய் வரதட்சணை புகார்கள், பொய் குடும்ப வன்முறைப் புகார்கள், பொய் கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்காரப் புகார்கள் போன்றவற்றால் இன்றைய நிலையில் நம் சமூகத்தில் ஒரு பெண்ணிடம் ஊடாடுதல், பழகுதல் என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் ஒரு பாம்புப் புற்றில் கைவிடுவதற்குச் சமம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஆண் மகனைப் பெற்ற பெற்றோர்கள அனைவரும் தங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.
இந்த நிலை நீடித்தால், நம் நாட்டில் ஒரு ஆணுக்கு திருமணம் செய்விப்பதற்கு முன் அந்த ஆணும் அவனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் அனைவரும் கட்டாயம் முன் ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் நிலையும், அதன் நீட்சியாக ஆண்சிசுக் கொலைகளும் பரவலாக நிகழும் நாள் சீக்கிறமே தோன்றும் என்பது திண்ணம்!
தொடர்ச்சி » »
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, anti-male, arrest, biased laws, divorce, dv act, father, husbands, law, misuse, parents, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து
By: Tamil 498A on: 2010-02-03 | பார்வை: 486|
பொய் வழக்குகள் மற்றும் ஆண்களுக்கு எதிரான அநியாயங்களை எதிர்த்து 3101-2010 அன்று நாக்பூரில் நடந்த பேரணி காட்சிகள்.
Nagpur Marathon 2010
Dear Brother's, i am uploading the marathon photo. we are thankful to all particepent . we in future expect such co operation.
220 photos
சார்ந்த வகை 498a | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, child custody, crisp, divorce, dv act, father, husbands, law, misuse, parents, protest-day, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-02-01 | பார்வை: 151|
நம் நாட்டின் பெண்ணியவாதிகள் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்!
ஒரு போலீஸ் அதிகாரியை ஒரு பெண் போட்ட 498A கேசு தொடர்பாக ஆள் மாறாட்டத்தில் வெட்டித் தள்ளினார்கள். இப்போது ஒரு பெண்மணி குடிபோதையில் காரை ஓட்டி ஒரு போலீஸ் அதிகாரி உட்பட இரண்டு பேரை போட்டுத் தள்ளியிருக்கிறார்.
இதே போல் ஒரு ஆண் குடி போதையில் காரை ஓட்டி இடித்ததில் ஒரு பெண்ணின் சுண்டு விரலில் அடிபட்டிருந்தால் கூட குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்து அந்த ஆணை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்கள்!
இதுதான் உலகம்!
ஜனவரி 31,2010. செய்தி : தினமலர்
மும்பை: மது அருந்திய பெண், தான் ஓட்டி வந்த காரை, போலீஸ் ஜீப் மற்றும் பைக் ஒன்றின் மீது மோதிய விபத்தில், உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் உயிரிழந்தனர். காவலர்கள் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போக்குவரத்து துறை ஏ.சி.பி., அனில் தகால்கர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் மும்பையின் தென் பகுதியை சேர்ந்த அழகுக் கலை நிபுணரான நூரியா ஹவேலிவாலா (27), மது அருந்திய நிலையில் காரை ஓட்டி வந்தார். கட்டுப்பாட்டை இழந்த அவரது கார், போலீஸ் ஜீப் மற்றும் பைக்கின் மீது மோதியது. இதில், போக்குவரத்து துறை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தீனாநாத் ஷிண்டே மற்றும் பைக்கில் வந்த அப்சல் கனோஜியா ஆகிய இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நான்கு காவலர்களும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நூரியா ஹவேலிவாலாவை போலீசார் கைது செய்தனர். மருத்துவ சோதனையில், அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அனில் தகால்கர் கூறினார்.
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, drunken woman, misuse, ஆண்பாவம், குடிபோதை, சட்டம், சமூகம், பொய் வழக்கு
By: Tamil 498A on: 2010-01-25 | பார்வை: 181|
முழங்கட்டும், சங்கொலி!
இந்தியப் பெண்கள் ஆணாதிக்க சமூகத்திலிருந்து முழு விடுதலை அடைந்து விட்டனர். இந்த மகத்தான சாதனைக்கு முழுக் காரணமாக அமைந்த பெருமை AIDWA போன்ற பெண் விடுதலை இயக்கங்களுக்கும், மற்றும் ஆண்களை அழித்து பெண்களை முன்னேற்றத் துடிக்கும் ஜொள்ளு ஸ்பெஷலிஸ்டு கிழக் கோட்டான்களுக்குமே சேரும்!
இதுநாள் வரை கள்ளக் காதலுக்கு பலியாகிக் கொண்டிருந்தவர்கள் அப்பாவி கணவன்மார்கள்தான் என்பதால் நம் சமூகம் எந்தக் கவலையுமில்லாமல் இருக்கிறது. ஏனென்றால் கணவர்கள்தானே சாகிறார்கள், எப்படியும் கல்யாணம் என்று ஒன்று ஆகிவிட்டால் கணவன் ஒன்று சிறைக்குப் போக வேண்டும் இல்லாவிட்டால் கள்ளக்காதல் மனைவியின் கையால் சாகடிக்கப்பட வேண்டியவந்தானே என்ற கருத்தில் அதைப் பற்றி கவலைப் படாமல் இதுகாரும் இருந்து கொண்டிருந்தது. Husband is an expendable commodity.
ஆனால், இப்போது கள்ளக்கதல் கொலை என்பது கணவனைத் தாண்டி, கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் பேதைகளின் உடன் பிறந்த சகோதரர்களையும் பெற்ற தாயையும் தாக்கத் தொடங்கிவிட்டது இதன் பரிணாம வளர்ச்சியைக் காண்பிக்கிறது!
இதோ, இதைப் படித்துவிட்டு முரசு கொட்டுங்கள்:-
கள்ளக்காதலை கண்டித்த அண்ணனை வெட்டிக் கொன்ற தங்கை
தடுத்த தாய்க்கும் சரமாரி வெட்டு
தொடர்ச்சி » »
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, husbands, law, lust, misuse, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-01-23 | பார்வை: 213|
மணப்பெண் ஓட்டம்- பரிதவித்த மாப்பிள்ளை
சனிக்கிழமை, ஜனவரி 23, 2010. செய்தி – தட்ஸ்தமிழ்
சென்னை: காதலனை மணப்பதற்காக திருமண வீட்டில் இருந்து வெளியேறிய மணமகள் போலீஸ் உதவியடன் பதிவு திருமணம் செய்துகொண்டார். இதனால் ஏமாற்றமடைந்த மாப்பிள்ளைக்கு ‘திடீர்’ மணமகளுடன் திருமணம் நடந்து முடிந்தது.
சென்னையை அடுத்த நீலாங்கரை வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் பிரியா (19). இவர் திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தன்னுடன் வேலை பார்த்த பெரம்பூரை சேர்ந்த பாஸ்கரை (28) காதலித்து வந்தார். ஆனால் பிரியாவிற்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததால் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி விட்டனர்.
மேலும் பிரியாவிற்கு மாப்பிள்ளையாக சொந்த தாய் மாமனையே தேர்வு செய்தனர். இது பிரியாவிற்கு பிடிக்காததால் பெற்றோருடன் சண்டை போட்டார்.
தனது காதலனிடமும் தகவலைக் கூறி, எங்காவது ஓடி விடலாமா என கேட்டார். ஆனால், காதலன் பாஸ்கர் பொறுத்திருக்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் பிரியாவிற்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. முன்தினம் இரவு மண்டபத்தில் திருமண வரவேற்புக்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டிருந்தது.
அப்போது அலங்காரம் செய்ய பியூட்டி பார்லருக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற பிரியா, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
தொடர்ச்சி » »
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் anti-male, biased laws, harassment, husbands, lust, victims, ஆண்பாவம், ஓட்டம், கலாசாரச் சீரழிவு, காதல், கொடுமை, செக்ஸ், வெறி
By: Tamil 498A on: 2010-01-22 | பார்வை: 274|
பட்டப் பகலில் துடிக்கத் துடிக்க சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் வெற்றிவேல். அவர் யார்? அவர் சீருடையில் டூட்டியில் இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்!
அவர் இப்படி காட்டுமிராண்டித்தனமாக வெட்டிச் சாய்க்கப்பட்டதின் அடிப்படைக் காரணம் என்ன?
ஆம்! இபிகோ செக்ஷன் 498A தான்!
நம் நாட்டிலிருக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்காக, பல பெண்ணியவாதிகள் போராடிப் பெற்றுத் தந்திருப்பதாக பறை சாற்றிக் கொண்டிருக்கும் அந்தக் கொடுங்கோன்மை பொல்லாங்குச் சட்டமான 498a சட்டத்தின் நீட்சியாகத்தான் ஒரு பாவமும் அறியாத சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை செய்யப்பட்டிருக்கிறார்!
கடையம் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தை கொலை செய்வதாக நினைத்துக் கொண்டு ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ வெற்றிவேலை வெட்டிச் சாய்த்துவிட்டனர்.
இந்தக் கொலையை செய்தது யார்? சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தின் மனைவி சிவகாமி!
தொடர்ச்சி » »
சார்ந்த வகை 498a, கொலை | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, harassment, husbands, law, misuse, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், பொய் வழக்கு, ராமாத்தாள், வரதட்சணை, வெறி
By: Tamil 498A on: 2010-01-21 | பார்வை: 407|
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி
கள்ளக்காதலனுடன் கைது
ஊட்டி, ஜன.20 – 2009. செய்தி: தினத்தந்தி
http://www.dailythanthi.com/article.asp?NewsID=541418&disdate=1/20/2010&advt=2
ஊட்டி தடுப்பணையில் கிடந்த ஆண் பிணம், கொலை செய்யப்பட்டு வீசப்பட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி அருகே சுற்றுலா இடமான தொட்டபெட்டா பகுதி அமைந்து உள்ளது. அந்த வனப்பகுதியை அடுத்து அரசு ஆராய்ச்சி பண்ணை அமைந்துள்ளது. இந்த இடத் தில் இருந்து கார்டன்மந்து செல்லும் குறுக்கு பாதையில் தடுப்பணை கட்டப்பட்டு நீர் தேக்கம் செய்யப்படுகிறது.
இந்த நீர் தேக்கத்தில் கடந்த 7-ந் தேதி 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். அவர்கள் இது குறித்து ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத் துக்கு தகவல் கொடுக்கப்பட் டது. தகவலின் பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றினார்கள். தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கபில்குமார் சராட்கர் உத்தரவின் பேரில் ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக்குமார் மேற்பார்வையில் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலைய (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சத்தியசாதன், சப்-இன்ஸ் பெக்டர்கள் பிரவீனா, சிவசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக கடந்த 9-ந் தேதி `தினத்தந்தி’ யில் இறந்தவரின் படம் மற்றும் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் காரணமாக இறந்தவர் பாலன் என்கிற பாலகிருஷ்ணன் (வயது 55) வெலிங்டன் லூர்துபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
திடுக்கிடும் தகவல்கள்
இதை தொடர்ந்து போலீ சார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
தொடர்ச்சி » »
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, aidwa, anti-male, biased laws, harassment, husbands, law, lust, paramour, sudha ramalingam, u.vasuki, ஆண்பாவம், உ.வாசுகி, கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக் காதலன், கள்ளக்காதல், கள்ளத் தொடர்பு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சமூகம், சுதா ராமலிங்கம், செக்ஸ், ஜனநாயக மாதர் சங்கம், தாய்மை, ராமாத்தாள், வெறி
சமீபத்திய மறுமொழிகள்